தமிழக செய்திகள்

சென்னையில், 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னையில் 12 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எலிசா பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர் கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய காச நோய் நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையில் 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர் கூறுகையில், இந்த ஆய்வின் முடிவில் 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முழுமையாக முடிவடைந்த பிறகு தான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பது தெளிவாக தெரியவரும்.

ஆய்வு விரைவில் முடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியிடம் முழு விவரங்களும் ஒப்படைக்கப்படும். இந்தியாவில் 4-ல் ஒரு பகுதியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதன்படி டெல்லியில் 23 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், புனேவில் 50 சதவீதம் பேருக் கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்