தமிழக செய்திகள்

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மதுராந் தகத்தை சேர்ந்த குமார் என்பவர் கள்ளத்துப்பாக்கி களை வாங்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது போலீசுக்கு தெரியவந்தது.

குற்றப்புலனாய்வு பிரிவு சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாறு வேடத்தில் சென்று தனது பெயரை சந்தோஷ் என கூறி குமாரை சந்தித்தார். சதுரகிரி மலைப் பகுதியில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது போலீஸ் அதிகாரி, குமாரிடம் தனது நண்பர் ஒருவருக்கு கள்ளத்துப்பாக்கி வேண்டும். வாங்கி தர முடியுமா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த குமார், சென்னையில் உள்ள எனது நண்பர்கள் சிலர் துப்பாக்கியை விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக வாங்கி தருகிறேன் என்று கூறியுள் ளார். இதையடுத்து குமாரை வைத்தே கள்ளத்துப்பாக்கி கும்பலை பிடிக்க போலீசார் வியூகம் வகுத்தனர்.

இதன்படி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகில் வைத்து கள்ளத்துப்பாக்கி கும்பலை மடக்கி பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ஓட்டல் அருகே காத்திருந்த படியே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளத்துப்பாக்கி கும்பலை மடக்கி பிடித்தனர். வியாசர்பாடி கன்னிகா புரத்தை சேர்ந்த கோபி நாத், அண்ணாநகர் ஆர்.வி.நகரை சேர்ந்த முருகன், மதுராந்த கத்தை சேர்ந்த குமார், பிரகாஷ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முருகன் தி.மு.க. பிரமுகர் ஆவார். கோபிநாத் புரட்சி பாரதம் கட்சியில் பொறுப்பில் உள்ளார். கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்தும் ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கி 9 எம்.எம்.பிஸ்டல் ரகத்தை சேர்ந்ததாகும். மாறு வேடத்தில் இருந்தது போலீஸ் என்று தெரியாமல் கைதான 4 பேரும் ரூ.5 லட்சத் துக்கு பேரம் பேசியுள்ளனர்.

போலீசார் பறிமுதல் செய்துள்ள கள்ளத்துப் பாக்கியை அர்ஜூன் என்ப வர்தான் விற்று தருமாறு கூறியுள்ளார். கள்ளத்துப்பாக்கியுடன் சிக்கிய 4 பேரிடமும் அர்ஜூன் யார்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். இதற்கு இடைத்தரகராக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஒருவரும் செயல்பட்டுள்ளார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு