தமிழக செய்திகள்

கடலூரில் ஷேர் ஆட்டோ- அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயம்

கடலூரில் ஷேர் ஆட்டோ- அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனா.

தினத்தந்தி

விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று காலை வந்தது. அந்த பஸ் டவுன்ஹால் வளைவில் திரும்பியபோது, நேதாஜி தெருவில் இருந்து பாரதிசாலைக்கு வந்த ஷேர்ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர், மற்றொரு பயணி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விபத்து நடந்த இடம் பிரதான சாலை என்பதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்