தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் 12.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி, மெட்ரிக்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 122 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9,893 பேர், மாணவிகள் 9,773 பேர் என மொத்தம் 19,666 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் ஜூன் 27-ந் தேதி பிளஸ்-1 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தேர்ச்சி சதவீதம்

இதில் மாணவர்கள் 7,834 பேர், மாணவிகள் 8,907 பேர் என மொத்தம் 16,741 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவிகள் 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்கள் 79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் 12.14 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.13 ஆகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்