தமிழக செய்திகள்

கோவில்பட்டயில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

கோவில்பட்டயில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கோவில்பட்டி(கிழக்கு):

கோவில்பட்டியில் லாயல் மில் காலனியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் போலீசார் அந்தகடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்காரரான பாண்டியராஜ் மகன் செல்வராஜை (வயது 36) கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு