தமிழக செய்திகள்

காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

மொரப்பூர்:

மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்த முருகன் மகள் சுபவர்ஷினி (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் ஆகாஷ் (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் சுபவர்ஷினி காதலனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. .

இதனை தொடர்ந்து ஆகாஷ் தன்னுடன் பேசுமாறு சுபவர்ஷினியை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆகாஷ் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு சுபவர்ஷினி, அவருடைய தந்தை முருகன் மற்றும் சித்தப்பா தமிழரசு (46) ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் தொழிலாளியான தமிழரசுவை, ஆகாஷ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து ஆகாச கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்