தமிழக செய்திகள்

திண்டுக்கல் கொலை வழக்கில் ரவுடி காலில் சுட்டுப்பிடிப்பு

காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் சவேரியார்பாளையம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார்.

3 கொலைகள் உட்பட 15 வழக்குகளில் தொடர்புடைய விக்னேஸ்வரன் என்ற ரவுடியை பிடிக்க சென்றபோது, காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீசார் சுட்டதில் வலது முட்டியில் காயமடைந்து விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SCROLL FOR NEXT