தமிழக செய்திகள்

போடியில் பழைய இரும்பு கடைக்குள் புகுந்த பாம்புகள்

போடியில் இரும்பு கடைக்குள் பாம்புகள் புகுந்தன.

தினத்தந்தி

போடி ஒருகால் பாதை பாரதி நகர் பகுதியில் பழைய இரும்பு கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் கடை உரிமையாளர் கடையை திறக்க சென்றார். கடையை திறந்தபோது அங்கு 2 பாம்புகள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்து ஓடினார். பின்னர் அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி கடையில் பதுங்கி இருந்த 2 பாம்புகளையும் பிடித்தனர். அவை சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு