தமிழக செய்திகள்

தேனி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

தினத்தந்தி

தேனி மாவட்டத்தில் 4 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் போடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு