தமிழக செய்திகள்

திருவாரூரில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை

பூக்கள் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் திருவாரூரில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனையானது.

தினத்தந்தி

பூக்கள் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் திருவாரூரில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனையானது.

பூக்கள் விலை

திருவாரூரில் உள்ள கடைவீதியில் ஏராளமான பூ கடைகள் உள்ளன. இந்த பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

அப்போது அதற்கேற்றார்போல் பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். இதே போல மழை காலத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், வரத்து குறைவாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும்.

சுபநிகழ்ச்சிகள் இல்லை

அதன்படி திருவாரூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து உள்ளது. 1 கிலோ ரூ.600-க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.400-க்கு விற்பனையானது. மேலும் ரூ.500- க்கு விற்பனையான ஒரு கிலோ முல்லை பூ ரூ.300-க்கு விற்கப்பட்டது. அரளி ரூ.160, ரோஸ் ரூ.120-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்களின் தேவை அதிகம் இருந்தது. இதன் காரணமாக பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று (நேற்று) முதல் சுப நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் பூக்கள் விலை குறைந்துள்ளது என்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்