தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருச்செந்தூர்:

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவையும், திருச்செந்தூர் வட்ட பேரவையும் இணைந்து திருச்செந்தூர் விஸ்வகர்மா மடத்தில் பேரவை கூட்டத்தை நடத்தின. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அய்யாகுட்டி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பாலசிங் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவ ஆழ்வார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கலிலூர் ரஹ்மான் மாவட்ட அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரவு,செலவு அறிக்கையையும் வாசித்தனர். வட்டக்கிளை அறிக்கையை செயலாளர் மணியனும், வட்டக்கிளை வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கல்யாணியும் வாசித்தனர். திருச்செந்தூர் கூட்டுறவு நிலவள வங்கி முன்னாள் தலைவர் விஜயராகவன், வட்ட செயலாளர்கள் அப்துல் ஜாபர், சுப்பையா, வட்ட பொருளாளர் பால்துறை ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட துணை தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு