தமிழக செய்திகள்

திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி 46% ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்