தமிழக செய்திகள்

பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பில்லூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்