தமிழக செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வத்தின் அளவு நேற்றைய அளவான 1,779 கனஅடியில் இருந்து இன்று 3,068 கன அடியாக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 முறை நிரம்பியது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. மேலும் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதால் தற்போது பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.

பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 3,100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையில் தற்போது 32.8 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?