தமிழக செய்திகள்

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் - மத்திய மந்திரி எல்.முருகன்

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

தினத்தந்தி

கோவை,

கோவையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கொடியை அசைத்து சுதந்திர விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடியேற்ற பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார். தமிழகத்தில் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி இருக்கின்றனர். சுதந்திரத்திற்காக போராடிய அறியப்படாத தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

தேசிய பக்தி இருப்பவர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவார்கள். 2047-ல் அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறி வல்லரசாக இந்தியா மாறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு