தமிழக செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் களியக்காவிளையில் தகவல் மையம் திறப்பு

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், இந்த மையத்தில் ஆலோசனைகள் பெற்று சபரிமலை சென்று வருகின்றனர். இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு