தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவில்லம் ஆக்கவே ஆய்வு பணி: ஆட்சியர் அறிவிப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவில்லம் ஆக்கவே ஆய்வு பணி நடைபெறுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.#VedhaIllam

தினத்தந்தி

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக வருமான வரி துறையினர் முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சாட்சியத்திற்காக மட்டுமே வருமான வரி துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். வேதா இல்லத்தில் ஒரு மணிநேரம் ஆய்வு நடைபெறும் என கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு