தமிழக செய்திகள்

காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தினத்தந்தி

காரைக்குடி,

நாட்டின் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், மக்கள் கூடும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி காரைக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் ரெயில் பயணத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ரெயில்நிலையத்தின் வெளியே நின்ற ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்