தமிழக செய்திகள்

இலங்கையில் சர்வதேச கராத்தே போட்டி: பதக்கம் வென்ற ஈரோடு வீரர்களுக்கு வரவேற்பு

இலங்கையில் சர்வதேச கராத்தே போட்டி: பதக்கம் வென்ற ஈரோடு வீரர்களுக்கு வரவேற்பு

இலங்கையில் உள்ள இன்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பு உலக அளவில் 2-வது சர்வதேச கராத்தே சாம்பியன் கோப்பை போட்டியை நடத்தியது. இதில் 7 நாடுகளை சேர்ந்த சுமார் 600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணி சார்பாக இ.கெபிராஜ் தலைமையில் தமிழ்நாடு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த அணியில் ஈரோடு புதோகாய் கராத்தே பயிற்சி பள்ளி வீரர்-வீராங்கனைகள் ஈ.எஸ்.கீர்த்திவாசன், எஸ்.பிரகதீஸ்வரன், கே.உதயன், என்.சென்விகா ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்றனர். மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளிப்பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ரெயில் மூலம் ஈரோடு வந்தனர். அவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் என்.வீராசாமி, ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஏ.சக்திவேல் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொருளாளர் பி.ஆனந்தன், எம்.கோவிந்தராஜ், ரமேஷ், ஜனார்த்தனன், மனோஜ்குமார், ஆனந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT