தமிழக செய்திகள்

உலக தாய்மொழி நாள்: நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. பிரசண்ணகுமார் முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இன்று எஸ்.பி. பிரசண்ணகுமார் முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும், "எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT