தமிழக செய்திகள்

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை - செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. #HasiniMurderCase #JusticeForHasini #DeathSentence

செங்கல்பட்டு,

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

இதையடுத்து குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து. அவா அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார். கடந்த டிசம்பர் 13-ந் தேதி கோர்ட்டுக்கு வந்த தஷ்வந்தை மகளிர் அமைப்பினர் தாக்கிய சம்பவமும் நடந்தது.

விசாரணை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. பின்னர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் 42 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இருதரப்பு இறுதி வாதங்களும் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் வந்திருந்தனர்.

வழக்கு குறித்த அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 19-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று செங்கல் பட்டு கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குற்றவாளி தஷ்வந்த், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . தொடர்ந்து கோர்ட் கதவுகள் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்குள் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் ,அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை கூறினார். குற்றம் நிரூபிக்கபட்டு உள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரத்தை பின்னர் ஒத்திவைத்தது.

குற்றவாளியான தஷ்வந்த் தனக்கு தண்டனையை குறைத்து வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இன்று மாலை நீதிபதி வேல்முருகன் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கொலை, சாட்சியங்களை மறைத்தல், குழந்தை கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவின் கீழ் தண்டனை வழங்கினார் நீதிபதி

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...