தமிழக செய்திகள்

தலைக்கேறிய போதை... 60 அடி உயரத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்

மது போதையில் 60 அடி உயரத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை 1 கி.மீ. தூரம் சுமந்து சென்று தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மதுபோதையில் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார். உடனே தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வர, உயரம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து வந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (வயது 45), என்றும் ரெயில்வே பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் மது போதையில் இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்