தமிழக செய்திகள்

விசாரணை அதிகாரி சந்தானத்திடம் பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர். மாணவிகள் சார்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் சந்தானம் குழுவிடம் புகார் தெரிவித்தார்.

மதுரை

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவலும் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இதனிடையே நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே கவர்னர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த 18-ந் தேதி முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், மாணவிகளிடம் 3 நாட்களாக சந்தானம் விசாரணை நடத்தினார். இதையடுத்து சென்னை சென்ற அவர் இன்று காலை மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்கினார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் தெரிவித்து சந்தானத்திடம் மனுக்களாக அளித்தனர்.

அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், சந்தானத் திடம் வழங்கினார். இது தொடர்பாகவும் சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும் நிர்மலா தேவி யிடம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவும் சந்தானம் திட்டமிட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த அதிகாரி சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு