தமிழக செய்திகள்

ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் சஸ்பெண்ட்

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

சென்னை,

நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்தார்.

சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன். இந்நிலையில், பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்