தமிழக செய்திகள்

ஐ.டி. என்ஜினீயரை காரில் கடத்தி நகை-பணம் பறிப்பு: 4 பேர் கைது

கோவையில் ஐ.டி. என்ஜினீயரிடம் 'கிரைண்டர்' செயலி மூலம் அறிமுகமான நெல்லையைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த என்ஜினீயரை காரில் கடத்திச் சென்றார்.

கோவை,

கோவையில் ஐ.டி. என்ஜினீயரை காரில் கடத்திச் சென்று, நகை மற்றும் பணத்தை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.டி. என்ஜினீயர் காரில் கடத்தல்

கோவையில் ஐ.டி. என்ஜினீயர் சஞ்சய் என்பவரிடம் 'கிரைண்டர்' செயலி மூலம் நெல்லையைச் சேர்ந்த ஆத்விக் என்பவர் அறிமுகமானார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சய்யை காரில் கடத்திச் சென்றுள்ளார்.

நகை-பணம் பறிப்பு, 4 பேர் கைது

சிறுவாணி சாலையில் வைத்து அவரை தாக்கி, அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துவிட்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆத்விக் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.