தமிழக செய்திகள்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலம்

வாய்மேட்டில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

தினத்தந்தி

வாய்மேடு:

வாய்மேட்டில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

தண்ணீர் குழாயில் உடைப்பு

வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. துளசியாப்பட்டினம் நீரேற்று நிலையத்தில் இருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு வழியாக தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யம் வரை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர்குழாய் செல்கிறது.

இந்த பிரதான குழாயில் வாய்மேடு கடைத்தெரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இந்த பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

வீணாகும் அவலம்

இந்த நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த குழாயில் இதே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்படுகிறது.

மேலும் தண்ணீர் தட்டுப்பாடு இப்பகுதியில் நிலவி வருகிறது. எனவே இந்த உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை