தமிழக செய்திகள்

விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்

விற்பனைக்காக பலாப்பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன பலாப்பழங்கள்தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் டீ, காபி உள்ளிட்ட சூடான பானங்களை தவிர்த்து தர்ப்பூசணி, பழ ஜூஸ் மற்றும் பழவகைகள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களிலும் பலாப்பழம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே, பழைய பஸ் நிலையம், அரண்மனை உள்ளிட்ட பல இடங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பலாப்பழங்கள் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது