சென்னை,
முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி 110-விதி யின் கீழ் வாசித்த அறிக்கை வருமாறு:-
நம்மோடு ஆந்திரம், கர் நாடகம், கேரளம் இணைந்து, பிரசிடன்சி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன் வைத் தார்.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவை யில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக் கும் வகையிலும், சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித் தார்கள்.
உலக நீதி நூலான திருக் குறளை அதிக மக்கள் பேசும் சீன, அரபு மற்றும் கொரிய மொழிகளிலும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஒளவையாரின் ஆத்திச் சூடி ஆகியவை சீன மற்றும் அரபு மொழி களிலும், மொழி பெயர்த்து தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்தார்.
தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது,
தமிழ்த் தாய் விருது
தமிழ்ச் செம்மல் விருது
அம்மா இலக்கிய விருது
போன்ற 55 விருதுகளை அறிவித்தார்.
தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர் பான ஆய்வுகள் மேற் கொண்டு, தமிழ் மொழி யின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்ல, அமெரிக் காவில் உள்ள ஹார்வேர்டு பல் கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க புரட்சித் தலைவி வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
வரும் ஜனவரி 14-ஆம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறை சாற் றும் வகையில், கலை, விளை யாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக் கப்படுவார்கள்.
தமிழுண்டு, தமிழ் மக் களுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற பாவேந் தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழ்நாட் டையும் கண்ணின் மணி போல தொடர்ந்து காத்து வரும் என்பதை இந்த மாமன் றத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொண்டு அமை கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
#TNAssembly | #EdappadiPalanisamy | #TNGoldenJubilee