தமிழக செய்திகள்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு மார்ச் 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் ஆகிய இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. ஜே.இ.இ. தேர்வானது ஜே.இ.இ. முதன்மை மற்றும் அன்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான, ஜே.இ.இ. முதன்மை தேர்வின் முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி 24-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 544 மையங்களில், 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை 12 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேர் எழுதினர்.

இந்த நிலையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், https://jeemain.nta.ac.inஎன்ற இணையதளத்தில் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து