தமிழக செய்திகள்

கொடைக்கானல் அருகே ஜீப்பை திருடியவர் கைது

கொடைக்கானல் அருகே ஜீப்பை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியை சேர்ந்தவர் நாட்ராயன். விவசாயி. கடந்த 23-ந்தேதி இரவு இவர், தனக்கு சொந்தமான ஜீப்பை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் நாட்ராயன் எழுந்து பார்த்தபோது, அவரது ஜீப்பை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் விசாரணை நடத்தினார். அதில், நாட்ராயனின் ஜீப் வடமதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஜீப்பை கைப்பற்றினர். மேலும் அதனை திருடி சென்ற வில்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்