தமிழக செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகை பறித்துவிட்டு தப்பி ஓடினர்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் மாயக்காள் (வயது 70). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை மாயக்காள் தனது வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், மாயக்காள் வீட்டின் கதவை தட்டினர். இதனால் கண்முழித்த அவர் கதவை திறந்த பார்த்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மாயக்காள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து மாயக்காள், ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்