தமிழக செய்திகள்

இந்தியா - வியட்நாம் கடலோரக் காவல் படைகளின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நிறைவு..!

நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சென்னை,

இந்தியக் கடலோரக் காவல் படை (ICG) மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) இணைந்து நடத்திய ‘சஹ்யோக் ஹாப்-டாக்’ (SAHYOG HOP-TAC) என்ற கடல்சார் கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பதிப்பு, இன்று சென்னை கடற்கரைக்கு அப்பால் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியா - வியட்நாம் கூட்டுப் பயிற்சி

இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு நடவடிக்கையில், இந்தியக் கடலோரக் காவல் படையின் எட்டு கப்பல்கள் மற்றும் ஆறு விமானங்கள் ஆகியவற்றுடன், வியட்நாம் கடலோரக் காவல் படையின் ‘சி எஸ் பி 8002’ என்னும் கப்பலும் பங்கேற்றது. இப்பயிற்சி நடவடிக்கைகள் இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படையின் துணைத் தளபதி ஆகியோரால் கூட்டாகக் கண்காணிக்கப்பட்டன.

முக்கிய மைல்கல்

இரு படைகளுக்கிடையே செயல்பாட்டு ரீதியிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைச் சீரமைக்கவும் இந்தத் தீவிரப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அவசரகால நடைமுறைகளை செயல்படுத்துதல், கடலில் தடையற்ற ஒருங்கிணைப்பை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சியில் இடம்பெற்றன. கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், இரு படைகளுக்கிடையே செயல்பாட்டு திறன்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.