தமிழக செய்திகள்

மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள்.

லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த லோகநாதன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவொற்றியூர் பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் செல்வா (29). வெல்டிங் தொழிலாளியான இவர், நிவேதா (25) என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு நிவேதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் விரக்தி அடைந்த செல்வா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு