தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி கலவரத்தில் போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில், போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தேவி கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் பிரகாஷ் (வயது 24), கல்வீசி தாக்குதல் நடத்திய கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் இந்திரா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் செந்தமிழன் (27), பங்காரம் கிராமம் பாலன் மகன் முரளி (32) ஆகியோரை கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்