தமிழக செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3,552 காலிப்பணியிடங்களக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?