தமிழக செய்திகள்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் அந்த குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் உள்ளதும், 66 வயது ஆணுக்கு நீண்ட நாள் சிறுநீரக கோளாறு இருந்ததும், 24 வயது வாலிபருக்கு நிமோனியா பாதிப்பால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த இந்த 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.

இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளின் முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை