கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காவல் சரகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 156 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குளச்சல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.