தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழா: லட்ச தீபத்தில் ஜொலிக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் !

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

மதுரை,

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம் கடந்த 24-ம் தேதி சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியின்போது பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளினர்.

10 நாட்கள் நடைபெரும் இந்த உற்சவத்தில் இன்று திருக்கார்த்திகை தீபவிழா நடைபெற்றது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகமே அழகுற ஜொலித்தது. சுவாமி சன்னதி முன்புள்ள சித்திரை வீதியிலும், அம்மன் சன்னதியின் சித்திரை வீதியிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளையும், சுவாமியையும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்