தமிழக செய்திகள்

கதிர் காமேஸ்வரி அம்மன் கோவிலில்குத்துவிளக்கு பூஜை

கதிர் காமேஸ்வரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

திருவரங்குளம் அருகே திருமலைராய சமுத்திரத்தில் கதிர் காமேஸ்வரர் சமேத கதிர் காமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருமலைராய சமுத்திரம் ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்