தமிழக செய்திகள்

பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை

பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை விழுந்தது.

தினத்தந்தி

ராமநாதபுரம் சூரங்கோட்டை காலனியை சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 50). இவரிடம் பெரியார் நகரை சேர்ந்த ரவி(50) இடம் வாங்கி தருவதாக கூறி கடந்த 4 வருடமாக ரூ.6.70 லட்சம் பணம் மற்றும் 30 பவுன் நகைகளை பெற்றாராம். இந்த நிலையில் இடத்தையும் முடித்து தராமல், பணத்தையும், நகையையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விஜயராகவன், ரவியின் வீட்டிற்கு சென்று பணம், நகை கேட்டபோது, ரவி மற்றும் அவரது மனைவி இந்திரா(47) ஆகியோரின் தூண்டுதலின்பேரில் ரவியின் நண்பர்களான செந்தில்(40), கபார்கான்(36) ஆகியோர் விஜயராகவனை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து செந்தில், கபார்கான் ஆகியோரை கைது செய்தனர். 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்