தமிழக செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்

பள்ளி மாணவி கடத்தியது தொடாபாக போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா.

தினத்தந்தி

திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் அருண்குமார் (வயது 20). இவர் கூரியர் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே பனங்குப்பத்தைச்சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவியை கடத்திச்சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற அருண்குமாரையும் தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு