தமிழக செய்திகள்

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ அன்பழகன், கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கனகராஜ் கூட்டு சதியில் ஈடுபட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். கோடநாடு பங்களாவில் கை கடிகாரம், அலங்கார பொருட்கள் மட்டுமே கொள்ளை போயுள்ளது. கொள்ளையடிக்க முயன்றவர்கள் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோடநாடு வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?