தமிழக செய்திகள்

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்தனர்.

தினத்தந்தி

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் மகிழ்ச்சியாக குளித்து செல்வார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொடிவேரி அணையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தற்போது பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொடிவேரி அணையில் தண்ணீரானது ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை