தமிழக செய்திகள்

கொல்லிமலையில்குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதன் காரணமாக நேற்று மலைப்பகுதியில் திடீரென பனிமூட்டம் காணப்பட்டது. அதேபோல் 30-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 70-வது கொண்டை ஊசி வளைவு வரையிலும், சோளக்காடு, செம்மேடு செல்லும் பிரதான சாலையிலும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் பஸ், கார் மற்றும் லாரிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சிரமத்துடன் சென்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை கடந்தவர்களும் சிரமப்பட்டனர். எனினும் நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு நிலவும் குளுகுளு சீசனால் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...