தமிழக செய்திகள்

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

சங்கராபுரம், 

சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவபாண்டலம் குந்தவேல் முருகர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில், சங்கராபுரம் பூட்டை சாலை முருகன் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது