தமிழக செய்திகள்

34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்

100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,498 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு திருக்குடமுழுக்கு விழா நடத்தப்படு வருகிறது. அந்த வகையில் 07.05.2021 முதல் 20.03.2024 வரை 1,498 திருக்கோவில்களுக்கு சிறப்பாக திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடமுழுக்கு விழா நடைபெற்ற கோவில்களின் விவரங்களையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து