தமிழக செய்திகள்

சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெ.தருண்யா கலந்து கொண்டு விளையாடி 2-ம் இடம் பிடித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட உள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்த மாணவி தருண்யாவை அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது, ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு