தமிழக செய்திகள்

பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

பொன்னமராவதி தாலுகா கேசராபட்டியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வீட்டில் ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்பு கோவில் வளாகத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 151 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கேசராபட்டி ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை