தமிழக செய்திகள்

பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

பாண்டமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு பாண்டமங்கலம் அருகே கபிலர்மலையிலிருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தவறி பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து