தமிழக செய்திகள்

சிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு

சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

தினத்தந்தி

சிவகாசி தாலுகாவில் உள்ள தாயில்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா (வயது 62). இவர் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் மருந்து அரைக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த சண்முகையா தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி விட்டு தீப்பெட்டி ஆலையின் ஒருபகுதியில் ஓய்வு எடுக்க சென்றார். அப்போது அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராமலிங்கம் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு